search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இருளில் மூழ்கிய பழனி நகர் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதி
    X

    பழனியில் மின் தடை ஏற்பட்ட சமயத்தில் மலைக்கோவில் மின் விளக்குகளில் மங்கலாக ஜொலித்தது.

    இருளில் மூழ்கிய பழனி நகர் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதி

    • பழனி நகர் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    • போதை ஆசாமிகள் விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்றால் கூட இருட்டான சாலையில் அவரை கண்டறிய இயலாது.

    பழனி:

    கோவில் நகரான பழனியில் அடிக்கடி மின்தடை என்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையினால் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

    பஸ் நிலையம் முதல் அடிவாரம் வரை நேற்று இரவு ஏற்பட்ட மின் தடையால் அந்த பகுதியில் மக்கள் நடமாடவே அச்சமடைந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மெயின் ரோடு பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் கடைகளை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

    இது போன்ற கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் வர அச்சமடைந்துள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் வரும் போதை ஆசாமிகள் விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்றால் கூட இருட்டான சாலையில் அவரை கண்டறிய இயலாது.

    எனவே நகரில் ஏற்படும் மின் தடையை தடுக்க வேண்டும் எனவும் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்

    Next Story
    ×