என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
இருளில் மூழ்கிய பழனி நகர் வழிப்பறி சம்பவங்களால் பொதுமக்கள் பீதி
- பழனி நகர் இருளில் மூழ்கியதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
- போதை ஆசாமிகள் விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்றால் கூட இருட்டான சாலையில் அவரை கண்டறிய இயலாது.
பழனி:
கோவில் நகரான பழனியில் அடிக்கடி மின்தடை என்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடையினால் வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
பஸ் நிலையம் முதல் அடிவாரம் வரை நேற்று இரவு ஏற்பட்ட மின் தடையால் அந்த பகுதியில் மக்கள் நடமாடவே அச்சமடைந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மெயின் ரோடு பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் கடைகளை உடைத்து பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இது போன்ற கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்கள் அடிக்கடி நடந்து வரும் நிலையில் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் வர அச்சமடைந்துள்ளனர். மேலும் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் வரும் போதை ஆசாமிகள் விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்றால் கூட இருட்டான சாலையில் அவரை கண்டறிய இயலாது.
எனவே நகரில் ஏற்படும் மின் தடையை தடுக்க வேண்டும் எனவும் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்