search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேராவூரணி பகுதியில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்
    X

    நெற்பயிர் தரையில் சாய்ந்துள்ளது.

    பேராவூரணி பகுதியில் தொடர்மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள்

    • பேராவூரணி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது.
    • திடீரென பெய்த பருவம் தவறிய மழையால் அப்பகுதியில் உள்ள வயல்களில் நெற்பயிர் தரையில் சாய்ந்து விழுந்து விட்டது.

    பேராவூரணி:

    தஞ்சை மாவட்டம், பேராவூரணி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால் வயலில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.

    பேராவூரணி அருகே மாவடுகுறிச்சி மேற்கு செங்கமங்கலம் செல்லும் பகுதியில் சுமார் 50 ஏக்கர் வயல்களில் நெற்பயிர் விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.

    இந்நிலையில் திடீரென பெய்த பருவம் தவறிய மழையால் அப்பகுதியில் உள்ள வயல்களில் நெற்பயிர் தரையில் சாய்ந்து விழுந்து விட்டது. தண்ணீரில் மூழ்கிய நிலையில் பயிற்கள் சேதமடைந்தது.

    இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையுடன் உள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×