என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பாதயாத்திரை
குடியாத்தம்:
வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75 ஆவது சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு 60 ஆண்டு கால காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்கியும் தற்போது நடைபெற்று வரும் பாரதி ஜனதா கட்சியின் ஆட்சியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத போக்கினை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறது.
இரண்டாம் நாள் பாதயாத்திரை நேற்று தொடங்கி குடியாத்தம் வழியாக பாக்கம், ராமாலை, பரதராமி சென்றடைந்தது வழிநெடுகிலும் பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியின் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில பேச்சாளர் முத்து மகாதேவன், ஆடிட்டர் கிருபானந்தம், நயீம் பரவேஸ் ஆகியோர் பேசினர்.
குடியாத்தம் நகர தலைவர் ரங்கநாதன் வரவேற்றார்.மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் கிருஷ்ணவேணி, நகர மன்ற உறுப்பினர் விஜயன், வட்டாரத் தலைவர் வீராங்கன், மாவட்ட நிர்வாகிகள் சரவணன், யுவராஜ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் விக்ரம் உள்பட ஏராளமானோர் இந்த பாதயாத்திரையில் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்