search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருக்கடையூரில் பா. ஜனதா சார்பில்சா தனை விளக்க பொதுக்கூட்டம்
    X

    சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.

    திருக்கடையூரில் பா. ஜனதா சார்பில்சா தனை விளக்க பொதுக்கூட்டம்

    • செங்கோலை சாட்சியாக கொண்டு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்.
    • ஈழத்துக்கும் பூம்புகாருக்கும் இடையே தொடர்பு இருந்தது

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பா. ஜனதா கட்சியின் சார்பில் மத்திய அரசின் 9-ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருக்கடையூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது-

    மயிலாடுதுறை மண்ணின் பெருமையை செங்கோல் மூலமாக பாரத பிரதமர் இந்தியா முழுவதும் எடுத்துச் சென்றுள்ளார். 1947 இல் திருவாவடுதுறை ஆதீனம் அப்போதைய பிரதமர் நேருவி டம் வழங்கிய செங்கோலை நேரு கைத்தடியாக அலகாபாத் அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டது.

    புதிய பாராளுமன்றத்தில் அதே செங்கோலைதிருவா சகம், கோளறு பதிகம் தேவாரத்தோடு பாராளு மன்றத்தில் செங்கோலை நிறுவி பாரத பிரதமர் மயிலாடுதுறை மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

    மயிலாடுதுறை மண்ணில் உள்ள திருவாடுதுறை ஆதீனத்திலிருந்து தரப்பட்ட செங்கோலை சாட்சியாக கொண்டு மூன்றாவது முறையாக நரேந்திர மோடி ஆட்சி அமைப்பார்.

    ஈழம் நன்றாக இருந்தபோது ஈழத்துக்கும் பூம்புகாருக்கும் இடையே தொடர்பு இருந்தது அந்த தொடர்பு மீண்டும் வளர வேண்டும் என்பது நரேந்திர மோடியின் எண்ணமாக உள்ளது. நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்துவது முக்கியம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் அகோரம் தலைமை தாங்கினார், மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம்,மாநில செயற்குழு உறுப்பினர் பட்டியல் அணி வழக்கறிஞர் இராம. சிவசங்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வழக்கறிஞர் பிரிவு மாநில பார்வையாளர் ராஜேந்திரன் வரவேற்று பேசினார்.

    தேசிய பொதுக்குழு உறுப்பினர் அம்பேத்க ராஜன், மாவட்ட பொது செயலாளர் நாஞ்சில் பாலு, உள்ளீட்ட நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட பொதுச் செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.

    Next Story
    ×