என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊட்டி ஜெ.எஸ்.எஸ். கல்லூரியில் கருத்தரங்கு
- கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.
- நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
ஊட்டி,
ஊட்டி ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியில் மருந்து வேதியல் துறை சார்பில் திறன் மற்றும் ஆளுமை மேம்பாடு என்ற தலைப்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடந்தது. இதனை புதுடெல்லி தேசிய மகளீர் ஆணையம் நிதி உதவியுடன் ஜெ.எஸ்.எஸ் ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி குழுமம் ஒருங்கிணைத்தது. கல்லூரி முதல்வர் தனபால் தலைமை தாங்கினார்.
பேராசிரியர் ஆனந்த்விஜயகுமார் வாழ்த்தி பேசினார். மருந்து வேதியல் துறை இணைப்பேராசிரியர் கவுரம்மா வரவேற்றார்.நிகழ்ச்சியில் துறைத்தலைவர் காளிராஜன் பேசும் போது திறன் மேன்பாடு மற்றும் ஆளுமை பண்பை வளர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.
கோவை தொழில் முனைவோர் மேம்பாட்டுக்கான தேசிய அறக்கட்டளை தலைவர் டாக்டர் கணேசன் தொழில் திறன்களை வளர்ப்பதில் மாணவர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்று வலியுத்தினார்.
உதகை ஐவிஸ் நிறுவன தலைவர் பாபு பேசுகையில் சமூகஊடகங்களை மாணவர்கள் பயனுள்ளதாக மற்றும் அம்சங்கள் குறித்து பற்றி விளக்கினார். கல்லூரி துணை பேராசிரியர் ஜெயக்குமார் பேசும்போது ஆளுமை வளர்ச்சி மற்றும் மன அழுத்த முறைபாடு பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
மைசூரு ஜெ.எஸ்.எஸ் தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் ஜெய் சாமராஜேந்திர பொறியியல் கல்லூரியின் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் புஷ்பலதா மாணவர்களுடன் கலந்துரையாடும் போது உலகளாவிய திறன் மேன்பாட்டில் மாணவ ர்களின் பங்கு பற்றி எடுத்துரைத்தார். முடிவில் கல்லூரி இணை பேராசிரியர் துரை ஆனந்த் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்