search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கரிமவளம் நிறைந்த மண்ணால்தான் நதிகளில் நீரோடச் செய்திட முடியும்: சத்குரு ட்வீட்
    X

    கரிமவளம் நிறைந்த மண்ணால்தான் நதிகளில் நீரோடச் செய்திட முடியும்: சத்குரு ட்வீட்

    • சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
    • வளமிழந்த மண்ணால் தண்ணீரை உறிஞ்சவோ, சேர்க்கவோ முடியாது.

    கோவை:

    சர்வதேச நதிகள் அமைப்பு "சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினத்தை" ஆண்டுதோறும் மார்ச் 14 ஆம் தேதி கொண்டாடி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு சர்வதேச நதிகள் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சத்குரு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிபிட்டுள்ளதாவது:

    "கரிமவளம் நிறைந்த மண்ணால்தான் மழைநீரை உறிஞ்சி, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, நதிகளில் நீரோடச் செய்திட முடியும்; வளமிழந்த மண்ணால் தண்ணீரை உறிஞ்சவோ, சேர்க்கவோ முடியாது. எனவே நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அல்லது வறண்டுவிடும். மண்காப்போம், நதிகளை காப்போம். இவ்வாறு அவர் குறிபிட்டுள்ளார்.

    Next Story
    ×