search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்தவர் கைது
    X

    ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை செய்தவர் கைது

    • பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • செல்போன் மற்றும் ரொக்கம் ரூ,360 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில், ஆன்லைன் மூலமாக லாட்டரி விற்பனை நடந்து வருவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது அந்தப் பகுதியில் செல்போன் மூலம் சிலருக்கு லாட்டரி எண்களை கூறி, ஆன்லைன் மூலம் லாட்டரி நடத்திய மயிலாடுதுறையை சேர்ந்த தம்பு சாமி என்பவர் மகன் முத்துலிங்கம்( வயது 32) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு செல்போன் மற்றும் ரொக்கம் ரூ,360 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×