search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மேலும் ஒருவர் கைது
    X

    கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மேலும் ஒருவர் கைது

    • கனியாமூர் பள்ளி கலவர வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    • போராட்டக்காரர்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இருந்து போனார். இதையடுத்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர்.

    இந்நிலையில் கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை செய்து வன்முறையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து வருகின்றனர். அதன்படி பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மஞ்சினியை சேர்ந்த பச்சமுத்து மகன் மணிவேல் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×