என் மலர்
உள்ளூர் செய்திகள்

கனியாமூர் தனியார் பள்ளி கலவர சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது
- சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- முல்லைவாடியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளி கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அதன்படி கலவரத்தின் போது போலீஸ் வாகனத்தின் மீதும், போலீசார் மீதும் கற்களை வீசி, தாக்கி வன்முறையில் ஈடுபட்ட சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே முல்லைவாடியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் பாஸ்கர் (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






