என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி- 10 பேர் படுகாயம்
    X

    திருவள்ளூர் அருகே சாலை விபத்தில் ஒருவர் பலி- 10 பேர் படுகாயம்

    • ரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது.
    • திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளுரை அடுத்த காக்களூரில் நடைபெற்ற சுப நிகழ்ச்சிக்கு பூந்தமல்லியை அடுத்த குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 7 பெண்கள் உள்பட 11 பேர் காரில் வந்தனர்.

    மீண்டும் இரவு 10 மணி அளவில் அங்கு திரும்பிச் சென்றனர். திருவள்ளூர் ஆவடி நெடுஞ்சாலை ராமாபுரம் அருகே சென்ற போது காரின் டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடியது. எதிரே உள்ள மின் கம்பத்தின் மீது கார் மோதியது. இந்த விபத்தில் குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (18) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலும் இந்த விபத்தில் திவாகர், ஏஞ்சலின், ரம்யா, இவாஞ்சலின், மோனிகா, தஸ்வின்குமார் உள்ளிட்ட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×