search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் வழியாக சென்ற ரெயிலில்  3.5 கிலோ கஞ்சா பறிமுதல்
    X

    சேலம் வழியாக சென்ற ரெயிலில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

    • கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.
    • ரெயிலில் சோதனை செய்தனர். அந்த பேக்கில் 2 பண்டல்களில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    சேலம்:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் ரெயில் நிலை யத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ெரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் பால முருகன் , ஏட்டுக்கள் பாலசுப்பிரமணியன், கண்ணன், சதானந்தம் ஆகியோர் இன்று காலை ரெயிலில் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    அந்த பேக்கில் 2 பண்டல்களில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இதையடுத்து கஞ்சாவை போலீஸ் நிலையம் கொண்டு சென்று கடத்தி வந்த நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×