search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருநாவுக்கரசர் பிறந்த நாளை முன்னிட்டு 1000 பெண்களுக்கு சேலை- செல்வப்பெருந்தகை வழங்கினார்
    X

    திருநாவுக்கரசர் பிறந்த நாளை முன்னிட்டு 1000 பெண்களுக்கு சேலை- செல்வப்பெருந்தகை வழங்கினார்

    • விழாவில் ஏழை மக்களுக்கு இரவு உணவுடன் 1000 பெண்களுக்கு பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது.
    • தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் ரூ. 500 கோடிக்கு மேலான காங்கிரஸ் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தோம்.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான சு. திருநாவுக்கரசர் பிறந்த நாள் விழா சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. முகப்பேர் மதன்பாலு வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணை தலைவர்கள் மோகனரங்கம், கணபதி, வி. விஜய், திலிப்குமார், கார்த்திகேயன், தமிழரசன், தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு. செல்வ பெருந்தகை, வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் அசன் மவுலானா, அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ். வி. ரமணி, மாநில துணை தலைவர் சொர்ணா சேதுராமன், மாநில பொது செயலாளர்கள் பெனட் அந்தோணி, ஜோதி ராமலிங்கம், மாநில பேச்சாளர் குமரி மகாதேவன், மாநில செயலாளர் ரகுநாதன் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணி தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட, சர்க்கிள் தலைவர்கள், வட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் ஏழை மக்களுக்கு இரவு உணவுடன் 1000 பெண்களுக்கு பேருக்கு சேலைகள் வழங்கப்பட்டது.

    விழாவில் சட்ட மன்ற காங்கிரஸ் தலைவர் கு. செல்வப் பெருந்தகை பேசுகையில், தலைவர் திருநாவுக்கரசு சிறந்த பண்பாளர். எல்லோரது மனதிலும் இடம் பிடிக்கும் பன்முகத் தன்மை கொண்டவர். அவர் 74 வயதிலும் ஒரு இளைஞரை போன்று செயல்படுகிறார். அவர் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய முகவரி. அவரைப் பற்றி நான் பேச வேண்டும் என்றால் எங்களுக்குள் எதிர்மறை கருத்துக்கள் இருந்தாலும் அதை பேசி உடனே புரிந்து கொண்டு செயல்படக்கூடிய தன்மை எங்கள் இருவருக்கும் அமைந்தது. இதை பார்த்து சில தலைவர்கள் எங்கள் மீது பொறாமை கொள்வதுண்டு. அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்தபோது சொத்துப் பாதுகாப்பு குழு ஒன்றை ஏற்படுத்தி அதில் என்னை தலைவராக நியமித்து நீங்கள் தான் இதை செய்து முடிப்பீர்கள் என்று என் மீது நம்பிக்கை வைத்து கொடுத்தார். அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் ரூ. 500 கோடிக்கு மேலான காங்கிரஸ் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தோம். இது பற்றி ராகுல்காந்தி அறிந்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் சொத்துக்களை மீட்க டெல்லியில் ஒரு கமிட்டி அமைத்து அதை அந்தந்த மாநிலத்திற்கு பார்வையாளர்களை போட்டு சொத்துக்களை பராமரிக்கவும் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுக்க ஆணையிட்டார். அதற்கு வழி வகுத்தவர் திருநாவுக்கரசர். ஜெயலலிதாவை போன்ற பெரிய ஆளுமைகளை உருவாக்கி அவர் வளர்ச்சிக்கு வித்திட்டவர் இது வரலாற்று உண்மை. அவர் வெள்ளந்தி மனம் படைத்தவர். எல்லோரையும் நம்ப கூடியவர். முதலமைச்சராக வரக்கூடிய தகுதி வாய்ந்த தலைவர் அவர். கல்வி சார்ந்த அறிவு சார்ந்த நிறுவனங்களை தொடங்கும் போது அதில் காமராஜர் என்ற பெயரை உச்சரிக்காமல் எந்த நடிகரும் எந்த அரசியல்வாதிகளும் தமிழ்நாட்டில் பயணிக்க முடியாது என்றார். முடிவில் மிதுன் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.

    விழாவுக்கான ஏற்பாடுகளை சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் அரும்பாக்கம் க.வீரபாண்டியன் செய்திருந்தார்.

    Next Story
    ×