என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி திருப்பூரில் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
    X

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி திருப்பூரில் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரம்

    • விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 7-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்,ஆக.8-

    இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி அடுத்த மாதம் 7-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்து அமைப்பு களின் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது வழக்கம்.

    இதற்காக தற்போது முதலே விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவ ட்டம் அலகுமலை அருகே விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரமடைந்து ள்ளது. சுமார் ஒரு அடி முதல் 5 அடி வரையிலான விநாயகர் சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த வருடம் கோமாதா விநாயகர் , சிவன் பார்வதி யுடன் கூடிய விநாயகர், முருகனோடு அமர்ந்துள்ள விநாயகர் , ஆஞ்சநேயர் தூக்கி செல்வது போன்ற விநாயகர் உள்ளிட்ட வடிவ ங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இந்து அமைப்புகள் தங்கள் பகுதிகளுக்கு தேவையான விநாயகர் சிலைகளை பதிவு செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு ஓரிரு நாட்கள் முன்னதாக இங்கிருந்து விநாயகர் சிலைகளை எடுத்து செல்வர்.

    விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்கு பின்பு ஆறு மற்றும் குளங்களில் கரை க்கும் போது மாசு ஏற்படு த்தாத வகையில் உற்பத்தி செய்ய வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வலியுறுத்தியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாசு ஏற்படுத்தாத வகை யிலான பொருட்களை கொண்டு சிலைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருவதாக சிலை வடிவ மைப்பாளர்கள் தெரிவி த்துள்ளனர்.* * * திருப்பூர் அலகுமலை பகுதியில் விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வர்ணம் தீட்டும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    Next Story
    ×