என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தில்  அரசு டவுன் பஸ்களில் இதுவரை 8.25 கோடி இலவச பயணங்கள்  கலெக்டர் கார்மேகம் தகவல்
    X

    மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தில் அரசு டவுன் பஸ்களில் இதுவரை 8.25 கோடி இலவச பயணங்கள் கலெக்டர் கார்மேகம் தகவல்

    • அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்டத்தின் மூலம் 233 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • கட்டணமில்லா பயண திட்டத்தால் பெண்களின் பயண எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    அரசு போக்குவரத்து கழகத்தின் சேலம் கோட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் எருமாபாளையம், வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர், ஓமலூர் மற்றும் தாரமங்கலம் ஆகிய கிளைகளில் இருந்து 233 நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கட்டணமில்லா பயண திட்டத்தால் பெண்களின் பயண எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 25.38 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயணங்கள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் அதிகரித்து தற்பொழுது 2022 ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 66.26 லட்சம் கட்டணமில்லா பேருந்து பயணங்கள் மகளிரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இத்திட்டம் தொடங்கப் பட்டது முதல் சேலம் மாவட்டத்தில் தற்பொழுது வரை மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தின் கீழ் 8.25 கோடி பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். அதிகபட்சமாக நகரப் பேருந்துகளில் பணிக்கு செல்லும் பெண்களும், உயர்கல்வி படிப்புக்குச் செல்லும் பெண்களும் இத்திட்டத்தினால் அதிகளவில் பயன்பெற்றுள்ளனர்.

    பொதுப் போக்குவரத்து பயணங்களை ஊக்கு விப்பதும், பெண்களின் சமூக பொருளாதாரத்திற்கு உகந்ததாக அமைந்துள்ள தால் சேலம் மாவட்டத்தில் அனைத்து தரப்பு மக்களி டமும் மகளிருக்கான கட்ட ணமில்லா பயணத்திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×