என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டி பாலியல் பலாத்காரம் தலைமறைவான வாலிபரை பிடிக்க தனிப்படை அமைப்பு
    X

    மூதாட்டி பாலியல் பலாத்காரம் தலைமறைவான வாலிபரை பிடிக்க தனிப்படை அமைப்பு

    • 78 வயது மூதாட்டி நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள கந்தமாரியம்மன் கோவில் திடலில் தெருக்கூத்து நடந்தது.
    • அப்போது மது போதையில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர், மூதாட்டியை பலவந்தமாக பலாத்காரம் செய்தார்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி பூசாரிமூப்பர் வளவு பகுதியை சேர்ந்த 78 வயது மூதாட்டி நேற்று முன்தினம் இரவு அருகே உள்ள கந்தமாரியம்மன் கோவில் திடலில் தெருக்கூத்து நடந்தது. இந்த தெருக்கூத்தை பார்த்து விட்டு இரவு மூதாட்டி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

    அப்போது மது போதையில் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர், மூதாட்டியை பலவந்தமாக பலாத்காரம் செய்தார். அவரது சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதையடுத்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து பூலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். தலைமறைவான வாலிபரை பிடிக்க இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், அக்கம், பக்கத்தில் வசிப்பவர்கள், பூசாரி மூப்பர் பகுதியில் வசிப்ப வர்கள் மற்றும் பக்கத்து ஊர்களில் உள்ளவர்களிடம் விசாரித்து வருகின்றனர். மேலும் சந்தேகபடும்படி உள்ள நபர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    மூதாட்டி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×