search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
    X

    மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி

    • சாலையில் நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பெருமாயி மீது மோதியது.
    • படுகாயம் அடைந்த பெருமாயியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் சூரமங்கலம் அருகே உள்ள பழையூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் இடும்ப கவுண்டர். இவரது மனைவி பெருமாயி (வயது 68).

    சம்பவத்தன்று இவர் பழையூர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பெருமாயி மீது மோதியது.

    இதில் படுகாயம் அடைந்த பெருமாயியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பெருமாயி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்த புகாரின்பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×