என் மலர்
உள்ளூர் செய்திகள்

மொபட்டில் இருந்து கீழே விழுந்து முதியவர் சாவு
- ஓடங்காடு விநாயகர் கோவில் அருகே பூனை ஒன்று குறுக்கே பாய்ந்து மொபட்டில் விழுந்தது.
- இதனால் மெபட்டியில் பிரேக் பிடிக்க முயன்றபோது முதியவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் பாட்டப்பன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 75). இவர் கடந்த 14- ந்தேதி தனது உறவினருக்கு சொந்தமான மொபட்டை எடுத்துக் கொண்டு சொந்த வேலையாக கோணகப்பாடி சென்றபோது ஓடங்காடு விநாயகர் கோவில் அருகே பூனை ஒன்று குறுக்கே பாய்ந்து மொபட்டில் விழுந்தது. இதனால் மெபட்டியில் பிரேக் பிடிக்க முயன்றபோது முதியவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது அக்கம்பக்கத்தினர் கீழே விழுந்தவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை தங்கவேல் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தங்கவேலின் மகன் ராஜா கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






