என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே லாரி மோதி முதியவர் பலி
- கருப்பூரை அடுத்த உள்ள டால்மியா போர்டு அருகே மொபட்டில் சென்றார்.
- அப்பொழுது அந்தவழியாக வந்த லாரியும், மொபட்டும் மோதிக்கொண்டன.
கருப்பூர்:
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள சுந்தர் நகர், மல்லமூப்பம்பட்டி, பகுதி சேர்ந்தவர் ஆஞ்சநேயர் (வயது 73). இவர் கருப்பூரை அடுத்த உள்ள டால்மியா போர்டு அருகே மொபட்டில் சென்றார்.அப்பொழுது அந்தவழியாக வந்த லாரியும், மொபட்டும் மோதிக்கொண்டன. இதில் ஆஞ்சநேயர் தலை மீது லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்தில் துடிதுடித்து பலியானார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கருப்பூர் இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






