என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி அகல ரெயில் பாதை பணிகளை அதிகாரிகள் ஆய்வு
- ரூ.120 கோடி செலவில் புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
- வருகிற மார்ச் 8-ந் தேதி முதல் நிரந்தர கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
திருத்துறைப்பூண்டி:
சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி ரெயில் சேவை வருகிற 29-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் ரூ.120 கோடி செலவில் புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய அகல ரெயில் பாதை பணிகளை கூடுதல் ரெயில்வே கோட்ட மேலாளர் ராமலிங்கம், முதுநிலை இயக்கவியல் மேலாளர் ஹரிகுமார், கோட்ட பொறியாளர் ரவிக்குமார், முதுநிலை கோட்ட வணிக மேலாளர் செந்தில்குமார், துணை தலைமை பொறியாளர் (கட்டுமானம்) வினோத் குமார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
பின்னர் கூடுதல் கோட்ட மேலாளர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறுகையில்,
வருகிற மார்ச் 8-ந் தேதி முதல் நிரந்தர கேட் கீப்பர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அதற்கு பின் கம்பன் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரெயில்களும் திருத்துறைப்பூண்டி வழியாக இயக்குவதற்கு பரிந்துரை செய்யப்படும் என்றார்.
முன்னதாக, ரெயில் உபயோக சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், செயலாளர் எடையூர் மணிமாறன், துணை தலைவர் துரை ராயப்பன், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் மற்றும் திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அனைவரையும் வரவேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்