என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மரக்காணம் பகுதிகளில் உர விற்பனை நிலையங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
- தர்பூசணி போன்ற பழவகை பயிர்களையும் பயிரிட தங்களது நிலத்தினை தயார் செய்து வருகின்றனர்.
- இடு பொருட்களை வழங்கும்போது கண்டிப்பாக பட்டியலிட்டு வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
விழுப்புரம்:
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் விவசாயிகள் நெல்நாற்று விடும் பணிகளைமுழு வீச்சில் தொடங்கியுள்ளனர். மானாவரி பகுதிகளில் உளுந்து, பச்சை பயிறு, பணப்பயிறு போன்ற பயறு வகை பயிர்களையும் எதிர்வரும் கார்த்திகைப்பட்டதில் மணிலா, எள் உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்களையும் தர்பூசணி போன்ற பழவகை பயிர்களையும் பயிரிட தங்களது நிலத்தினை தயார் செய்து வருகின்றனர். இந்நிலையில் கலெக்டர் தலைமையில் நடை பெற்ற விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தின் போது மாவட்ட கலெக்டர் பழனி உத்தர வினை தொடர்ந்து விவசாயி களுக்கு தேவையான இடுபொருட் கள் தரமானதாகவும் சரியான விலையிலும் கிடைப்பதை உறுதி செய்திடும் பொருட்டு மரக்கா ணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சரவணன் தலை மையில் மரக்காணம் வட்டா ரத்தில் உள்ள தனியார் இடுப்பொருள் விற்பனை நிலை யங்களை திடீர் ஆய்வு செய்தனர்.
இதில் உரங்கள் இருப்பு குறித்தும் பாயிண்ட் ஆப் சேல் மெஷின் மூலம் யூரியா உள்ளிட்ட உரங்களை விவசாயிகளுக்கு வழங்குவது குறித்தும்ஆய்வு செய்தனர்.குறிப்பாக தர்பூசணி பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் இயற்கை உரங்கள், குரோத் ரெகுலேட்டர் எனப்படும் வளர்ச்சி ஊக்கிகள் குறித்து ஆய்வு செய்து ஜி2 படிவம் இல்லாத பொருட்களை பறி முதல் செய்தனர். மேலும் தரமான பொருட்களை அதற் கான நியாயமான விலையில் விவசாயி களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும், இடு பொருட்களை வழங்கும்போது கண்டிப்பாக பட்டியலிட்டு வழங்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இதேபோன்று உரிமத்தில் அங்கீகரிக்கப்பட்ட பூச்சி மருந்துகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.ஆய்வின் போது வேளாண்மை அலு வலர் தேவி, துணை வேளா ண்மை அலுவலர் கதிரேசன் ஆகியோர் உடன் இருந்தனர். ஆய்வின் போது அங்கு கூடியி ருந்த விவசாயி களுக்கு வட கிழக்கு பருவமழை குறைந்தால் மேற்கொள்ள வேண்டிய மாற்றுப் பயிர் திட்டம் குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்