search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண்மை விரிவாக்க மையத்தை அதிகாரி ஆய்வு
    X

    வேளாண்மை விரிவாக்க மையத்தை வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

    வேளாண்மை விரிவாக்க மையத்தை அதிகாரி ஆய்வு

    • மாப்பிள்ளை சம்பா, ஆத்தூர் கிச்சலி ஆகியவைகள் 50 சதவீத மானியத்தில் மலிவான விலையில் கிடைக்கும்.
    • விதைகளை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் விநியோகம் ெசய்ய அறிவுறுத்தினார்.

    நீடாமங்கலம்:

    குடவாசல் வட்டாரத்தில் சம்பா, தாளடி இலக்காக சுமார் 14000 ஹெக்டர் நிர்ணயம் செய்யப்பட்டு விவசாய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், குடவாசல் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை சென்னை வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

    அப்போது சம்பா,தாளடி சாகுபடி க்கேற்ற நெல் விதை இருப்பு விவரங்களை கேட்டறிந்தார்.

    சம்பா, தாளடி சாகுபடிக்கு ஏற்ற ரகமான விதைநெல் மற்றும் விதைநெல் இருப்பு நிலையை ஆராய்ந்த அவர் விதை நெல்லை மிகத் தூய்மையாக பரா மரித்து கிடங்கினைசுத்த ப்படுத்தி,பூச்சி மேலா ண்மையினை மேம்படுத்தி உரிய காலத்தில் விவசாயி களுக்கு விற்பனை செய்திட வேளாண்மை விரிவாக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    மேலும், நெல் நுண்ணூ ட்டம், பயிர் நுண்ணூட்டம் ஆகியவற்றின் இருப்பு நிலையை ஆராய்ந்தார்.

    நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் விநியோகிக்கப்பட்டு வரும் பாரம்பரிய நெல் ரகங்களான தூயமல்லி, கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா மற்றும் ஆத்தூர் கிச்சலி ஆகியவற்றின் இருப்பு நிலையை ஆராய்ந்த அவர், 50 சதவீத மானியத்தில் மலிவான விலையில் கிடைக்கும் இவ்விதைகளை உரிய காலத்தில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் விநியோகம் செய்திட அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குனர் ரவீந்திரன், துணை இயக்குனர் ஹேமா ஹெப்சிபா நிர்மலா, வட்டார உதவி இயக்குனர் ஜெயசீலன், வேளாண்மை அலுவலர் வெங்கடேஸ்வரன், துணை வேளாண்மை அலுவலர் ரவி, உதவி வேளாண்மை அலுவலர் முருகன், தாமரைச்செல்வன் மற்றும் கிடங்கு மேலாளர் ஸ்ரீதர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×