search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்
    X

    சத்துணவு ஊழியர்கள் கையெழுத்து இயக்கம்

    • தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
    • ஓய்வு ஊதியம் ரூ.7850 வழங்க வேண்டும்.

    கோவை,

    கோவை மாவட்டம் சூலூர் சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சத்துணவு திட்ட பாதுகாப்பு உரிமை கையெழுத்து இயக்கம் என்ற பெயரில் நான்கு அம்ச கோரிக்கைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வைக்கு கொண்டு செல்வதற்காக சத்துணவு ஊழியர்கள் தமிழகத்தில் முதல் முதலாக கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர்.

    இதில் சத்துணவு ஊழியர்கள் அரசு பணியாளராக கருதி கால முறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வு ஊதியம் ரூ.7850 வழங்க வேண்டும், சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர், சமையல் உதவியாளருக்கு மூன்று லட்சமும் வழங்க வேண்டும், முதல்வரின் காலை சிற்றுண்டி தயாரிப்பை சத்துணவு ஊழியருக்கே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

    இதனை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமசாமி மற்றும் முன்னாள் மாநில தலைவர் பழனிசாமி ஒன்றிய பொறுப்பாளர் சிவகாமி ஒன்றிய தலைவர் வசந்தி ஆகியோர் இந்த கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தனர்.

    இது குறித்து பேசிய மாவட்ட தலைவர் ராமசாமி, சத்துணவு உரிமை மீட்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக சுல்தான் பேட்டையில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் அனைவரும் கையெழுத்திட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி வைக்க உள்ளோம். காலை சிற்றுண்டி திட்டத்தை தனியாருக்கு கொடுக்காமல் சத்துணவு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும், தனியாருக்கு கொடுக்கும் விலையை விட சத்துணவு ஊழியருக்கு குறைவான தொகை மட்டுமே செலவிடப்படுகிறது. எனவே அதை சத்துணவு ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×