என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
சத்துணவு ஊழியர் சங்கத்தினர், ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் கோரிக்கை மனு
- ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
- காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
முத்துப்பேட்டை:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வட்டார தலைவர் முருகையன், செயலாளர் எலிசபெத் ராணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:-
சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






