என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரிபாக்கி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ்
    X

    வரிபாக்கி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ்

    • பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வரிபாக்கியை பலர் செலுத்தவில்லை.
    • ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் சொத்து வரி, 3 கோடியே, 65 லட்சம், குடிநீர் கட்டணம், 3 கோடியே, 3 லட்சம், பாதாள சாக்கடை திட்டத்தில், 81 லட்சம் உள்பட, 7.50 கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி உள்ளது. வரிபாக்கி உள்ள தொழில் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் சினிமா தியேட்டர்களுக்கு நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் வரிபாக்கியை பலர் செலுத்தவில்லை.

    இந்த நிலையில் நேற்று நகராட்சி வருவாய் ஆய்வாளர் லூக்காஸ், வருவாய் உதவியாளர் செல்வராஜ் ஆகியோர் கிருஷ்ணகிரி டி.பி., லிங்க் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஜப்தி நோட்டீசை ஒட்டினார்கள். அதில், கடந்த 3 ஆண்டுகளாக மண்டபத்தின் தொழில்வரி, சொத்துவரி கட்டப்படவில்லை.

    நிலுவைத ்தொகையான, 3 லட்சத்து, 21 ஆயிரத்து, 608 ரூபாயை வருகிற 6-ந் தேதிக்குள் கட்டத்தவறும் பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நகராட்சியில் வரி பாக்கி நிலுவையுலுள்ள அனைவரும் உடனடியாக வரியை கட்டுமாறும் நகராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

    Next Story
    ×