என் மலர்
உள்ளூர் செய்திகள்

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களைக் கொண்டே நடத்திட வேண்டும்.
- காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
கிருஷ்ணகிரி,
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில் இருந்து தர்மராஜா கோவில் சாலை வழியாக வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை பேரணி யும், ஆர்ப்பாட்டமும் நடந்தது.
மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மதியழகன் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்.
மாநில செயலாளர் ஜெயந்தி தொடக்க உரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் சந்திராச்சாரி, தனலட்சுமி, வெண்ணிலா, வெங்கடரத்தினம், குணவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் மஞ்சுளா நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியர்களைக் கொண்டே நடத்திட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.
அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது 600-லிருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும். விருப்பத்தின் பேரில் பணி மாறுதல் வழங்க வேண்டும்.
பதவி உயர்வு வழங்கிட வேண்டும். உணவூட்ட செலவினங்கள் பிரதிமாதம் தடையின்றி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.






