என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி மாவட்டத்தில் 3,348 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்பு
    X

    தருமபுரி மாவட்டத்தில் 3,348 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்பு

    • 3,348 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
    • ரூ.10,000, ரூ.25,000, ரூ.50,000- என 3 வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில் விவசாயிகளுக்கு 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2022-2023ஆம் ஆண்டிற்கு இதுவரை 3,348 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளதாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் சார்பில் விவசாயிகளுக்கு 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2022-2023ஆம் ஆண்டிற்கு 5,374 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 3,348 விவசாயிகளுக்கு புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும், விவசாயமின் இணைப்பு திட்டங்களை பொருத்தவரை சாதாரண பிரிவில் மின்இணைப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. சுயநிதிபிரிவில் மின்இணைப்பு பெற ரூ.10,000, ரூ.25,000, ரூ.50,000- என 3 வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

    சுயநிதி பிரிவில் கட்டணம் செலுத்தி பதிவுசெய்த பிறகும் மின்இணைப்புக்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு விரைவாக இணைப்பு வழங்குவதற்காக 2018-ல் தட்கல் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    இதில், 5 குதிரைத் திறன் உள்ள மின்மோட்டாருக்கு இணைப்பு வழங்க ரூ.2.50 லட்சம், 7.50 குதிரைத் திறனுக்கு ரூ.2.75 லட்சம், 10 குதிரைத் திறனுக்கு ரூ.3 லட்சம், 15 குதிரைத் திறனுக்கு ரூ.4 லட்சம் என 3 வகைகளில் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

    தருமபுரி மாவட்டத்தில் விவசாயமின் இணைப்பு வழங்குவதை துரிதப்படுத்த தருமபுரி மின்பகிர்மான வட்டம் தருமபுரி, பாலக்கோடு, அரூர் மற்றும் கடத்தூர் ஆகிய கோட்டத்திற்கு உட்பட்ட விவசாய விண்ணப்பதார்களுக்கு மின்வாரிய விதிமுறைக்கு உட்பட்டு பெயர் மற்றும் சர்வே எண் உட்பிரிவு மாற்றம் மற்றும் சர்வே எண், கிணறு மாற்றம் செய்து கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×