search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா
    X

    விழாவில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த நாள் விழா

    • சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
    • சிறப்பு விருந்தினர்களாக வால்டைர், பேராசிரியர் ரகுரதி பாண்டியன்,சுகுபாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நமது நாட்டின் விடுதலைக்கு ஆற்றிய பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சி, விளக்கக் கூட்டம் நடைபெற்றது. உடற்கல்வி இயக்குனர் கணேசன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமை தாங்கி பேசினார்.

    சிறப்பு விருந்தினர்களாக வால்டைர், கலசலிங்கம் கல்லூரி பேராசிரியர் ரகுரதி பாண்டியன் மற்றும் சுகுபாலா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் கணேசன், குருநாதன், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் மாணவர்கள் திலிப் குமார், இளங்கோ சிங், மாதேஷ், தினேஷ், மாடசாமி, சூர்யா, ஜாஹிர் கான், சுந்தர், சுடர்மணி, சூர்யா, முகமது புர்கான் ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் புஷ்பராணி, குமாரி செல்வி, சிவக்குமார், மகேஷ் ராஜா உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கணினி அறிவியல் துறைத் தலைவர் குருநாதன் நன்றி கூறினார்.

    Next Story
    ×