என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை ஈரடுக்கு மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து முதியவர் படுகாயம்
- இன்று மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
- வேல்முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நெல்லை:
ஆசியா விலேயே முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெயரை பெற்றது நெல்லை சந்திப்பில் இருந்து டவுனை நோக்கி செல்லும் பாலமாகும். நெல்லை, பாளை ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கும் இந்தப் பாலத்தை கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி முதல் ரூ. 2 கோடியே 85 லட்சம் செலவில் பராமரிப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை மேம்பாலத்தின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து கீழே விழுந்தது. இதில் பாலத்தின் கீழ் பகுதியில் இருச்சக்கர வாகனத்தில் சென்ற கொக்கிரகுளத்தைச் சேர்ந்த வேல்முருகன் (வயது 63) என்ற முதியவர் தலையில் கல் விழுந்து படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஈரடுக்கு மேம்பாலத்தில் முறையான பராமரிப்பு பணிகள் செய்யாததே விபத்திற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.இது குறித்து சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்