search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலகவுண்டம்பட்டி அருகேரிக் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
    X

    வேலகவுண்டம்பட்டி அருகேரிக் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

    • ரோஜா நகரை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 59). ரிக் வண்டியில் டிரில்லராக வேலை பார்த்து வந்தார்.
    • சீரங்கனுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எர்ணாபுரம், அத்தியப்பம்பாளையம், ரோஜா நகரை சேர்ந்தவர் சீரங்கன் (வயது 59). ரிக் வண்டியில் டிரில்லராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி செல்வி (49).

    சீரங்கனுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த 13-ம் தேதி தனது மனைவியிடம் நாமக்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறி விட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.

    இந்த நிலையில் சீரங்கன் தனது மருமகன் அருண்பாண்டியனுக்கு போன் செய்து, வீட்டிற்கு அருகில் உள்ள ஊஞ்சகாட்டில் விஷம் குடித்து உயிருக்கு போராடுவதாக கூறி

    யுள்ளார்.

    இதனையடுத்து அங்கு சென்ற அருண்பாண்டியன், சீரங்கனை மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி சீரங்கன் உயிரிழந்தார். இதுகுறித்து வேலகவுண்டன்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×