என் மலர்
உள்ளூர் செய்திகள்

உத்தனப்பள்ளி அருகே காப்பர் வயர் திருடிய வாலிபர் கைது
- நேற்று அந்த நிறுவனத்தில் மர்ம நபர் ஒருவர் காப்பர் வயர் 15 கிலோ திருடி கொண்டிருந்தார்.
- சுற்றி வளைத்து பிடித்து அந்த திருடனை உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள குந்துமாரனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது47). இவர் உத்தனப்பள்ளி அருகே ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
நேற்று அந்த நிறுவனத்தில் மர்ம நபர் ஒருவர் காப்பர் வயர் 15 கிலோ திருடி கொண்டிருந்தார்.
இதனை பார்த்த கிருஷ்ணமூர்த்தி சுற்றி வளைத்து பிடித்து அந்த திருடனை உத்தனப்பள்ளி போலீசில் ஒப்படைத்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் உத்தனப்பள்ளி இருளர் காலனியை சேர்ந்த ஏழுமலை (28) என்பது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






