search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தக்கலை அருகே  பெண்ணிடம் நகை பறித்தவர்களை காமிரா பதிவு மூலம் தேடும் போலீசார்
    X

    தக்கலை அருகே பெண்ணிடம் நகை பறித்தவர்களை காமிரா பதிவு மூலம் தேடும் போலீசார்

    • நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார்
    • பின்னால் மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீ ரென பிரபிலாவின் கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    தக்கலை, செப். 9-

    தக்கலை அருகே உள்ள மூலச்சல், வட்டியான் விளையைச் சேர்ந்தவர் பிரபிலா (வயது 37), லேப் டெக்னீசியன்.

    இவர் தனது கணவர் ராஜபாண்டேயுடன், நாகர்கோவில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் மாலையில் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து வீட்டுக்குப் புறப்பட்டனர்.

    மணலி சந்திப்பில் இருந்து மூலச்சல் சாலைக்கு அவர்கள் திரும்பிய போது, பின்னால் மோட்டார் சைக்கிள்களில் 2 பேர் வந்தனர். அவர்கள் திடீ ரென பிரபிலாவின் கழுத்தில் கிடந்த தங்க நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபிலா, தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதில் 9 பவுன் நகை பறி போனதாக குறிப்பிட்டு இருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிரா பதிவுகளை கைப்பற்றி, அதில் ஹெல்மெட் அணிந்து யாராவது தப்பிச் செல்கிறார்களா? அவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×