என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில் தண்டவாளம் அருகேசிதறி கிடந்த முதியவரின் உடல்
- தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் துண்டு, துண்டாக கிடந்தது.
- ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி சுப்ரமணிய நகரில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் உடல் துண்டு, துண்டாக கிடந்தது.
இது குறித்து அக்கம்பக்கத்தினர் உடனே சேலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விவரம் உடனே தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் முதியவர் ரெயில் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் சிக்கி இறந்தாரா? அல்லது வேறு யாராவது அவரை கொலை செய்து விட்டு உடலை தண்டவாளத்தில் வீசி சென்றனரா? அல்லது அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற பல்வேறு கோணங்களில் ரெயில் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.






