என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கராபுரம் அருகே தி.மு.க. கொடிகம்பம் சேதம்; 2 பேர் கைது
    X

    சங்கராபுரம் அருகே தி.மு.க. கொடிகம்பம் சேதம்; 2 பேர் கைது

    • சங்கராபுரம் அருகே தி.மு.க. கொடிகம்பம் சேதம்; 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தனது உறவினர்ளுடன் சின்னாத்தா வீட்டின் அருகில் உள்ள தி.மு.க. கொடிகம்பத்தின் சிமெண்டு கட்டையை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனவேல். இவரது மனைவி சின்னாத்தா (வயது 40). அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் பெரியசாமி (37), அவர் தனது உறவினர்ளுடன் சின்னாத்தா வீட்டின் அருகில் உள்ள தி.மு.க. கொடிகம்பத்தின் சிமெண்டு கட்டையை உடைத்து சேதப்படுத்தியதாக தெரிகிறது. இதை தட்டிக்கேட்ட சின்னத்தா மற்றும் அவரது கணவர் தனவேல் ஆகியோரை அவர்கள் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து சின்னாத்தா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் வழக்குப்பதிவு செய்து பெரியசாமி, குள்ளன் என்பவரது மகன் பழனிசாமி (53) ஆகியயோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×