என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்ட காட்சி.
ஏரியில் இறைச்சி கழிவுகள் கொட்டியதற்கு எதிர்ப்பு- பொதுமக்கள் சாலை மறியல்
- ஏரியில் இருந்து கடந்த 40 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
- இந்த ஏரியில் மீன் வளர்க்க குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது.
கருப்பூர்:
சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி ஊராட்சியில் உள்ள வட்டக்காடு பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வட்டக்காடு பகுதியில் தாக்குட்டை ஏரி உள்ளது. இந்த ஏரியில் இருந்து கடந்த 40 ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஏரியில் மீன் வளர்க்க குத்தகைக்கு ஏலம் விடப்பட்டது. மீன் வளர்ப்பவர்கள் இந்த ஏரியில் ேகாழி கழிவுகள், இறைச்சி கழிவுகள் மீன்களுக்கு தீவனமான ேபாடுவதால் ஏரி நீர் மாசுப்படுகிறது. இந்த தண்ணீர் வட்டக்காடு பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது.
இதை தடுக்க கோரியும் , அந்த ஏரியை தூர்வார கோரியும், ஏரியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. காமிராவை அகற்றகோரியும், குத்தகையில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்தும் இன்று காலை 8 மணிக்கு கைக்குழந்தைகளுடன் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வட்டக்காடு பஸ் நிறுத்தத்தில் வட்டக்காட்டில் இருந்து சேலத்திற்கு சென்ற அரசு டவுன் பஸ்சை சிறைபிடித்து மறியிலில் ஈடுபட்டனர். மறியல் போராட்டம் 11 மணி வரை நீடித்தது.
இது பற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி துணை அலுவலர் கோவிந்தராஜ், போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், சப்-இன்பெக்டர் ராஜா, கருப்பூர் வருவாய்துறை அலுவலர் அறிவுக்கண்ணு, ஊராட்சிமன்ற தலைவர் சுதா, துைண தலைவர் பரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் ஏரியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவை அப்புறப்படுத்தப்படும் என்றும் குத்தகையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அரசு பஸ்சை விடுவித்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






