search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே   குடும்ப தகராறில் பெண் தற்கொலை
    X

    போச்சம்பள்ளி அருகே குடும்ப தகராறில் பெண் தற்கொலை

    • தனலட்சுமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
    • ஆனால் வழியிலேயே தனலட்சுமி உயிரிழந்தார்.

    மத்தூர்

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள பிரியாட்டுக்காரன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்.

    இவரது மனைவி தனலட்சுமி (வயது 23). இவர்களுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் கணவன் , மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் மனமுடைந்த தனலட்சுமி பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    அவரை மீட்டு காவேரிப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் வழியிலேயே தனலட்சுமி உயிரிழந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 5 வருடத்திற்குள் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×