search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திட்டக்குடி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு சீல்
    X

    புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    திட்டக்குடி அருகே புகையிலை பொருட்கள் விற்ற 3 கடைகளுக்கு சீல்

    • திட்டக்குடி அருகே அருகேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது33), மகேந்திரன் (33).
    • தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள அருகேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மணிகண்டன் (வயது33), மகேந்திரன் (33). மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் அமானுல்லா (53). இவர்கள் தங்களது மளிகைக்கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக தகவல் வந்தது.

    அதன்படி ஆவினங்குடி போலீசாரில் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடமிருந்து 3 ஆயிரத்து 720 ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப் பட்ட புகையிலை பொருட் களை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து போலீசாரின் பரிந்துரையின் பேரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 3 மளிகைக்கடை களுக்கும் திட்டக்குடி தாசில்தார் கார்த்திக் தலைமையிலான வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.

    Next Story
    ×