search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரங்கிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
    X

    பரங்கிப்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

    • பரங்கிப்பேட்டை அருகே வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார்.
    • கட்டிங் மெஷின் மூலம் இரும்பை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியது.

    கடலூர்:

    பரங்கிப்பேட்டை அருகே உள்ள கீழ்அனுவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (30). இவர் தனக்கு சொந்தமான பழைய இரும்பு கடையில் கட்டிங் மெஷின் மூலம் இரும்பை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் வசந்தகுமார் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச் சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வசந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது தந்தை ராமையன் கிள்ளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×