என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாமக்கல் அருகேதூக்கு போட்டு இளம்பெண் தற்கொலை
- துரைசாமி. இவர் தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (38).
- கார்த்திகா கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கணக்கம்பாளையம், பொம்மம்பட்டியைச் சேர்ந்தவர் துரைசாமி. இவர் தனியார் நூற்பாலை யில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கார்த்திகா (38).
இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கார்த்திகா கடந்த சில ஆண்டுகளாக உடல் நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரி யில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல்நிலை சரியாகாமல் அவர் அவதிப்பட்டார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தூங்கச் சென்ற கார்த்திகா, வெகுநேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தாய் செல்வி, அறைக்கு சென்று கதவை தட்டிப் பார்த்தபோது உள்பக்கம் தாழிடப்பட்டு இருந்தது. பின்னர் கதவை பலமுறை தட்டியும் திறக்காத தால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போநாமக்கல் அருகே
தூக்கு போட்டு இளம்பெண் தற்கொலைது கார்த்திகா மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவரை மீட்டு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திகா உயிரிழந்தார். இது குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகா தற்கொலை செய்து கொண்டற்கு உடல்நலமின்மை தான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






