என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாகரசம்பட்டி அருகே நிலத்தகராறில் பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது
- நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- குடிபோதையில் விஜயாவை கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி அருகேயுள்ள தலியள்ளி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயா (வயது 50).இதே பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.இவர்களிடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதன் எதிரொலியாக பன்னீர்செல்வம் குடிபோதையில் விஜயாவை கத்தியால் குத்தி காயப்படுத்தி உள்ளார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள விஜயா கொடுத்த புகாரின்பேரில் நாகரசம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.
அவர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






