என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழைநீர் வடிகால் ஓடையில் கிடந்த ஆண் பிணம்.
மேட்டூர் அனல் மின் நிலையம் அருகேஅடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு
- மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே மழைநீர் வடிகால் ஓடை உள்ளது.
- ஓடையில் சுமார் 35 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் மிதந்தது.
மேட்டூர்:
சேலம் மாவட்டம், மேட்டூர் அனல்மின் நிலையம் அருகே மழைநீர் வடிகால் ஓடை உள்ளது. இந்த ஓடையில் சுமார் 35 வயது மதிக்கத் தக்க ஆண் பிணம் மிதந்தது.
இதை பார்த்த அந்த வழியாக சென்றவர், கரு மலைகூடல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், ஆண் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில், உயிரிழந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்த வர் என்று விவரம் தெரியவில்லை. அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






