என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மார்த்தாண்டம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த மூதாட்டி
- விசாரணையில் அவருக்கு தீராத நோய் இருந்ததாகவும் அதனால் மன உளைச்சல் இருந்ததாகவும் கூறப்படு கிறது.
- மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழித்துறை, ஜூன்.30-
மார்த்தாண்டத்தை அடுத்த மருதங்கோடு கல்லறைவிளை பகுதியை சேர்ந்தவர் பாலம்மாள் (வயது 73).
இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் இளைய மகன் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
நேற்று காலை பால் வாங்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர், வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை இதனால் பதறி போன உறவினர்கள்- உறவினர்கள் வீடு மற்றும் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர்.
இந்நிலையில் அருகாமையிலுள்ள ஒரு வாழைத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பாலம மாள் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவருக்கு தீராத நோய் இருந்ததாகவும் அதனால் மன உளைச்சல் இருந்ததாகவும் கூறப்படு கிறது.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்