என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மத்தூர் அருகே  பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
    X

    மத்தூர் அருகே பெண்ணை தாக்கிய வாலிபர் கைது

    • நேற்று ஜிலான் பிளாஸ்டிக் பைப் எடுத்து ஆசியாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.
    • மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஜிலானை கைது செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள வாலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜாப்பிரகான். இவரது மகன் ஜிலான் (வயது25). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது உறவினர் பாபு. இவரது மனைவி ஆசியா (48). இவர்கள் இரு குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று ஜிலான் பிளாஸ்டிக் பைப் எடுத்து ஆசியாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஆசியா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஜிலானை கைது செய்தனர். கைதான அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×