என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே மனைவி பிரிந்து சென்றதால் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வாலிபர் பலி
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படும்.
- லகுமேஸ் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியை சேர்ந்தவர் லகுமேஸ் (வயது 39), கூலித்தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்படும்.
கடந்த 3 மாதத்திற்கு முன்பு இதேபோல ஏற்பட்ட தகராறில் லகுமேசின் மனைவி சத்யா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரை குடும்பம் நடத்த வருமாறு பலமுறை அழைத்தும் திரும்ப வரவில்லை. இதனால் மனமுடைந்த லகுமேஸ் தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
உடல் கருகிய நிலையில் நிலையில் அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து லகுமேசின் மனைவி சத்யா கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






