search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில்தொழிலாளியை தாக்கிய 6 திருநங்கைகள் கைது
    X

    கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில்தொழிலாளியை தாக்கிய 6 திருநங்கைகள் கைது

    • திருநங்கை ரம்யாவுக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • ஆத்திரம் அடைந்த ரம்யா உள்பட 6 திருநங்கைகள் சேர்ந்து சரவணணை சரமாரியாக தாக்கினர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகே கட்டிகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது49). கூலி தொழிலாளியான இவர் நேற்று இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி டோல்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்ற திருநங்கை ரம்யாவுக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ரம்யா உள்பட 6 திருநங்கைகள் சேர்ந்து சரவணணை சரமாரியாக தாக்கினர்.

    இது குறித்து சரவணன் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து ரம்யா உள்பட 6 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×