என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அருகே பசுமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை
- கீழ்க்காத்தேரி ரேஷன் கடை எதிரில் மாடு இறந்து கிடந்தது.
- 3 பசுமாடுகள் வளர்த்து வந்தனர்.
அரவேனு,
கோத்தகிரி அருகே உள்ள கீழ்கோத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் சின்னான். இவரது மனைவி செல்லம்மா. இவர்கள் 3 பசுமாடுகள் வளர்த்து வந்தனர்.
வழக்கமாக மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகள் மாலையில் வீடு திரும்பி விடும். ஆனால் 2 மாடுகள் மட்டுமே வீடு திரும்பி இருந்தது. ஒரு மாட்டை காணவில்லை.
மாட்டை தேடிச் சென்றபோது கீழ்க்காத்தேரி ரேஷன் கடை எதிரில் மாடு இறந்து கிடந்தது.
சிறுத்தைப்புலி தாக்கியதில் மாடு இறந்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story






