என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டணம் அருகே பெண்ணை இரும்பு கம்பியால் தாக்கிய வாலிபர் கைது
- இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சிணை இருந்து வந்துள்ளது.
- ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் இரும்பு கம்பியால் முத்துவேடியம்மாளை சரமாரியாக தாக்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே தேவர் முக்குளம் அடுத்துள்ள ஊத்துபள்ளம் பகுதியை சேர்ந்தவர் முத்துவேடியம்மாள் (வயது58). விவசாயியான இவரது மகன் கூத்துராஜா.
இவரும், கிருஷ்ணகிரி கே.பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (32) என்பவரும் நண்பர்கள் ஆவர். இவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சிணை இருந்து வந்துள்ளது.
இதனால் நேற்று இவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் இரும்பு கம்பியால் முத்துவேடியம்மாளை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
Next Story






