என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காவேரிப்பட்டணம் அருகே   கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை
    X

    காவேரிப்பட்டணம் அருகே கிணற்றில் விழுந்து பெண் தற்கொலை

    • கணவர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.
    • கிணற்றில் குதித்து இறந்துள்ளதாக அப்பகுதியில் செய்தி பரவியது.

    காவேரிப்பட்டணம்,

    காவேரிப்பட்டணம் அடுத்த தேர்பட்டி ராமநாதன் நகரை சார்ந்தவர் பாக்கியம். இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. ஐந்து வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. அவருடைய கணவர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறார்.

    இதனால் பாக்கியம் மனம் உடைந்த நிலையில் இவருடைய தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தூங்க சென்றவர் இன்று காலை கிணற்றில் குதித்து இறந்துள்ளதாக அப்பகுதியில் செய்தி பரவியது. இதையடுத்து அவரது உடலை கிணற்றில் இருந்து மேலே தூக்கினர். பின்னர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி சம்பவ இடத்திற்கு விரைந்து பாக்கியத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிபட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து வழக்கு பதிந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×