என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீவட்டிப்பட்டி அருகே விஷம் குடித்த மூதாட்டி சாவு
- உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
- இதனால் மனமுடைந்த ஆராயம்மாள் வீட்டில் வைத்திருந்த பூச்சி கொல்லி விஷத்தை திடீரென குடித்தார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி ஆராயம்மாள் (வயது 60). இவர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் மனமுடைந்த ஆராயம்மாள் வீட்டில் வைத்திருந்த பூச்சி கொல்லி விஷத்தை திடீரென குடித்தார். இது பற்றி தெரிந்த கணவர் ஆறுமுகம், அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு சிகிச்சை பலனின்றி ஆராயம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை வருகின்றனர்.
Next Story






