search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே பயணிகள் ரயில் மீண்டும் பழுது:  பொது மக்கள் கடும்  அவதி
    X

    கடலூர் அருகே பயணிகள் ரயில் மீண்டும் பழுது: பொது மக்கள் கடும் அவதி

    • கடலூர் அருகே பயணிகள் ரயில் மீண்டும் பழுதனதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
    • கொரோனா ஊரடங்கு நேரத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ெரயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இயக்கப்பட்டன.

    கடலூர்:

    விழுப்புரத்திலிருந்து மயிலாடுதுறைக்கு பயணிகள் ெரயில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகள் ஏற்றுக்கொண்டு சென்று வருகின்றன. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு நேரத்தில் நிறுத்தப்பட்ட பயணிகள் ெரயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் இயக்கப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் விழுப்புரத்திலிருந்து ெரயில் பயணிகளை ஏற்றுக்கொண்டு மயிலாடுதுறை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது கடலூர் அருகே ஆலப்பாக்கம் ெரயில் நிலையம் சென்றடைந்தன. பின்னர் பயணிகளை ஏற்றுக்கொண்டு ெரயில் புறப்படும் போது ெரயில் என்ஜின் பழுதடைந்தது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் என்ஜினை பழுது சரி செய்து மீண்டும் 20 நிமிடத்தில் புறப்பட்டது. ஆனால் பயணிகள் ெரயில் சிறிது தூரம் சென்ற பிறகு பரங்கிப்பேட்டை பகுதியில் மீண்டும் ெரயில் என்ஜின் பழுதாகி நின்று விட்டது.

    இதன் காரணமாக ரயில்வே ஊழியர்கள் மீண்டும் என்ஜினில் ஏற்பட்ட பழுதை உடனடியாக சரி செய்ய முயன்றனர். ஆனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு என்ஜின் பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் ெரயில் புறப்பட்டது. இதன் காரணமாக காலை நேரங்களில் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கானர் ரயில் எஞ்சின் பழுதான காரணமாக கடும் அவதி அடைந்தனர். மேலும் பெரும்பாலான பயணிகள் நீண்ட நேரமாக ெரயில்வே தண்டவாளப் பகுதிகளிலும், பிளாட்பார்மிலும் காத்திருந்தனர். இதனை தொடர்ந்து 9 மணி அளவில் ெரயில் என்ஜின் சரிய செய்யப்பட்டு மீண்டும் ெரயில் புறப்பட்டன. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாகவே காணப்பட்டன.

    Next Story
    ×