search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே  இரு தரப்பினர் மோதல்  12 பேர் மீது வழக்கு
    X

    கடலூர் அருகே இரு தரப்பினர் மோதல் 12 பேர் மீது வழக்கு

    • கடலூர் அருகே இரு தரப்பினர் மோதல் 12 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • காயமடைந்த ஹரி மணிபாலன் மற்றும் இளைய பெருமாள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே அப்பியம் பேட்டை சேர்ந்தவர் சிவபிரகாசம். அப்பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் சாமி ஊர்வலத்தில் சிவபிரகாசத்திற்கும் , அதே பகுதியை சேர்ந்த அறிவழகனுக்கும் திடீரென்று வாய் தகறாறு ஏற்பட்டது. தகவல் அறிந்த சிவப்பிரகாசத்தின் தந்தை உத்திராபதி அறிவழகனிடம் தட்டி கேட்டார். அப்போது அறிவழகன் மற்றும் அவருடன் இருந்தவர்கள் திடீரென்று உத்திரபதியை திட்டினார்கள். அப்போது உத்திராபதியின் மற்றொரு மகன் ஹரி மணிபாலன் இது சம்பந்தமாக தட்டி கேட்டபோது, இரும்பு பைபால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    மேலும் இந்த தகராறு இரு தரப்பினருக்கும் மோதலாக மாறியது. இதில் காயமடைந்த ஹரி மணிபாலன் மற்றும் இளைய பெருமாள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து இருதரப்பினர் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் இளையபெருமாள், அறிவழகன், தமிழரசன், தமிழ்ச்செல்வன், ரவிச்சந்திரன், கணேசமூர்த்தி மற்றும் செல்வக்குமார், உத்திராபதி, ராஜ்குமார், சிவப்பிரகாசம், ஹரி மணிபாலன், ராம்கி ஆகிய 12 பேர் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×